தீராத பஞ்சாப் பஞ்சாயத்து!
'கோஷ்டி பூசலை தீர்க்க வந்தவருக்கே இந்த நிலையா...?' என, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் குறித்து பரிதாபப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிப்பதற்காக, காங்., பஞ்சாப் மாநில பொறுப்பாளராக பாகேலை, அக்கட்சி மேலிடம் நியமித்தது.
அவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, உற்சாகப்படுத்தி வந்தார். ஆனாலும், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் காங்., பஞ்சாப் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் ஆகியோரிடையேயான கோஷ்டி பூசல், பெரும் பிரச்னையாக இருந்தது.




