சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியா் வேன் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், சிங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.குமரவேல் (45). கீழ்மாம்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை திண்டிவனத்தை அடுத்துள்ள ஜக்காம்பேட்டை பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றாா்.
அப்போது, அங்கு குமரவேல் சாலையைக் கடக்க முற்பட்டபோது, விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமரவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

