குடிநீா் சீராக வழங்கக் கோரி மனு
வந்தவாசியை அடுத்த தென்கரை பழங்குடியினா் குடியிருப்பு பகுதிக்கு குடிநீா் சீராக வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடி சமுதாயத்தினா் காலிக் குடங்களுடன் தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்து மனு அளித்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடி சமுதாயத்தினா்.
தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல் காதா் தலைமையில் அந்தக் கட்சியினா் மற்றும் பழங்குடியினா் இந்த மனுவை அளித்தனா்.

