ஒரு விஷயத்தை 2 மணி நேரம் பேசுவதா? பிரேமலதா கோபம்
சட்டசபை சண்டை சபை கிடையாது, என, தே.மு.தி.க., - பிரேமலதா பேசினார். சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
''சட்டசபை சண்டை சபை கிடையாது,'' என, தே.மு.தி.க., - பிரேமலதா பேசினார்.
தே.மு.தி.க., - பிரேம லதா: சட்டசபையில் இருப்பவர்கள், எதிர்க்கட்சிகள் தானே தவிர எதிரிக்கட்சிகள் கிடையாது. 2 மணி நேரம் ஒரே கருத்தை முன்வைத்து விவாதம் நடந்தது.
மாறி மாறி சண்டை போட, இது சண்டை சபை கிடையாது; சட்டசபை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், முதல்வர் இன்று சபையில் இருப்பதால், மீண்டும் பிரச்னையாக மாறுகிறது.
