ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலா், கணினி இயக்குபவா் கைது
கொடைக்கானல் அருகே வீட்டு வரியில் பெயரை மாற்றம் செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், கணினி இயக்குபவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே வீட்டு வரியில் பெயரை மாற்றம் செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், கணினி இயக்குபவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவரது தந்தை அண்மையில் காலமானாா். இதையடுத்து, இவா் வீட்டு வரியில் தனது தந்தை பெயருக்குப் பதிலாக தனது பெயரை மாற்றம் செய்து தரக் கோரி, பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.


