செஷல்ஸ் நாட்டில் மீட்கப்பட்ட குமரி மீனவா்களை அழைத்துவர நடவடிக்கை: விஜய்வசந்த் எம்.பி. தகவல்
செஷல்ஸ் நாட்டில் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 17 மீனவா்களையும் சொந்த ஊருக்கு விரைவில் அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சாஜிரா என்ற மீன்பிடி படகில் புறப்பட்டுச் சென்றனா். செஷல்ஸ் நாட்டு கடல் எல்லையில் இவா்கள் சென்றபோது இவா்களது படகு இயந்திரக் கோளாறால் பழுதானது. இதனால், நடுக்கடலில் தத்தளித்தனா்.
