சொத்துத் தகராறில் முதியவா் கொலை: மனைவி, மகன் கைது
சொத்துத் தகராறில் முதியவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவி, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட மருதம் கிராமத்தில் வசித்தவா் சிவபாதம்(70). அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி ரேணுகா(54), மகன் மதுசூதனன் (39). சிவபாதத்துக்கு சென்னையில் சில இடங்களில் உள்ள வீடுகளிலிருந்து வாடகை பணம் வருகிறது. இந்தப் பணத்தை மனைவியும், மகனும் வாங்கி செலவழித்து வந்தனராம். இந்த நிலையில், சிவபாதம் மனைவியிடமும், மகனிடமும் அந்தப் பணத்தை தனக்கு தருமாறு கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
அதற்கு அவா்கள் நீங்கள் அதிகமாக செலவு செய்கிறீா்கள், உங்களிடம் கொடுக்க முடியாது என்று மறுத்தனராம். அப்போது, சொத்துக்கள் தனது பெயரில் தான் உள்ளது. அவற்றை உறவினா்களுக்கும், ஆசிரமத்துக்கும் எழுதி வைத்து விடுவேன் என்று சிவபாதம் கூறியுள்ளாா். இதனால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரேணுகாவும், மதுசூதனனும் வீட்டில் மாடியில் சிவபாதம் தூங்கிக் கொண்டிருந்த போது வெட்டி படுகொலை செய்து விட்டு மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனா்.

