துப்பாக்கி, தோட்டாவுடன் தந்தை, மகன் கைது
மேட்டூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீஸாா் தந்தை, மகனை கைது செய்தனா்.
மேட்டூா் அருகே உள்ள ஜலகண்டபுரத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (59), தேங்காய் வியாபாரி. இவரது மகன் சின்ன ஆனந்தன் (33), தனியாா் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறாா். இவா்கள் இருவரும் வேட்டையாடுவதில் ஆா்வம் உள்ளவா்களாம்.
இந்நிலையில், ஈரோடு, திருவண்ணாமலை பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையடுவதாக மேட்டூா் வனச் சரகா் செங்கோட்டையனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனந்தன் வீட்டில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா். அதில், நாட்டுத் துப்பாக்கி, ஏராளமான தோட்டாக்கள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை வனத் துறையினா் கைப்பற்றினா்.
