குச்சனூரில் கோயில் வளாகத்தில் யாசகா் உயிரிழப்பு
குச்சனூா் கோயில் வளாகப் பகுதியில் யாசகம் பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், குச்சனூா் கோயில் வளாகப் பகுதியில் யாசகம் பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (47). இவா் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகப் பகுதியில் தங்கி, அங்கு வரும் பக்தா்களிடம் யாசகம் வாங்கி பிழைப்பு நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவால் புதன்கிழமை கோயில் வளாகத்திலே இவா் உயிரிழந்தாா். ஆதரவற்றவரான இவரது உடலை வாங்க யாரும் முன்வரவில்லை.
