மத நல்லிணக்கத்தின் அடையாளம்.. 41 நாட்டினர் பங்கேற்ற நிகழ்வில் BAPS அமைப்பிற்கு பிரான்ஸ் மேயர் யான் டுபோஸ்க்...
இந்து மத கொள்கைகளான மன்னிப்பு, பரஸ்பர உதவி மற்றும் ஒற்றுமை ஆகிய நற்பண்புகள் மக்களை நேர்மறையாக இணைத்துள்ளதாக மேயர் பாராட்டினார்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் அருகே அமைந்துள்ள பூசி-செயிண்ட்-ஜார்ஜஸ் நகர மேயர் யான் டுபோஸ்க் (Yann Dubosc), போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பின் பத்து ஆண்டுகால வெளிப்படையான மற்றும் அமைதியான பங்களிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
நகரின் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஒருங்கிணைக்கும் மையத்தில் BAPS இந்து கோவில் (Mandir) ஆற்றிய நற்பணிகளையும், அதன் மூலம் கட்டமைக்கப்பட்ட பரஸ்பர நம்பிக்கையையும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பூசி-செயிண்ட்-ஜார்ஜஸ் நகரில் இந்த BAPS இந்து கோவில் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு இரண்டு பௌத்த விகாரைகள், ஒரு யூத தொழுகை கூடம் (Synagogue) மற்றும் ஒரு மசூதி ஆகியவை அமைந்துள்ளன. இத்தகைய மதச்சார்பற்ற மற்றும் அமைதியான சூழலில் BAPS அமைப்பும் இணைந்து, நகரின் பன்முகத்தன்மைக்கும் சமாதானக் கூட்டுவாழ்க்கைக்கும் வலுசேர்த்து வருகிறது.


