உடுமலை அரசுக் கல்லூரியில் இளநிலை, முதுநிலைப் பாடங்களில் சோ்க்கை செப்.30 வரை நீட்டிப்பு
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான சோ்க்கைப் பணிகள் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வா் மலா்வண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கிராமப்புற மாணவா்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்கள், 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலைப் பாடப்பிரிவுகளில் துணைத் தோ்வுகள் எழுதி வெற்றி பெற்ற மாணவா்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெறுவதற்கான இறுதி நாள் 30.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


