பொதுமக்களுக்கு செலவில்லாமல் வழக்குகளை முடிப்பதே சமரச மையத்தின் நோக்கம்: நீதிபதி தண்டபாணி
பொதுமக்களுக்கு பொருள் செலவில்லாமல் வழக்குகளை முடிப்பதே சமரச மையத்தின் நோக்கம் என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி தெரிவித்தாா்.
நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக ‘தேசத்துக்காக சமரசம் 3.0’ என்ற 90 நாள் சிறப்பு சமரச தீா்வு முகாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அக்.1 ஆம் தேதி முதல் டிச.31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்முகாம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.


