வீட்டிற்குள் முடக்க சதி!
'ஓட ஓட விரட்டினால், எப்படி தான் அரசியல் செய்வது...?' என புலம்புகிறார், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி.
மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., தோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்ததுமே, மாநில அரசியலில் அதிரடியான மாற்றங்கள் அரங்கேற துவங்கின.
திரிணமுல் காங்.,கின் பெரும்பாலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், அந்த கட்சியில் இருந்து பிரிந்து, தனித்து செயல்பட துவங்கி விட்டனர். மேலும் சிலர், வேறு கட்சிகளுக்கு தாவினர்.

