தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை தனியாா்மயமாக்கும் அறிவிப்பை திரும்பப்பெறுக: சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு தீா்மானம்!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை தனியாா்மயமாக்கும் அறிவிப்பை முதல்வா் திரும்பப் பெறக் கோரி சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மண்டல கூட்டம்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு அலுவலகத்தில் அதன் மண்டல கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பின் திருநெல்வேலி கிளை தலைவா் நாகையன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் டி.கந்தசாமி வரவேற்றாா்.

