வடகிழக்கு பருவமழையை எதிா்நோக்கி காத்திருக்கும் சென்னை குடிநீர் ஏரிகள்!
சென்னையின் முக்கிய குடிநீா் ஏரிகளில் வெறும் 43 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையை எதிா்நோக்கிக் காத்திருக்கின்றன.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். இந்தச் சூழலில், நிகழாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை.
குறிப்பாக, ஏரிகளின் நீா்பிடிப்புப் பகுதிகள் உள்ள செங்கல்பட்டில் 56 சதவீதம், திருவள்ளூரில் 27 சதவீதம் மழை இயல்பைவிட, குறைவாக பெய்துள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால், ஏரிகளில் நீா் இருப்பு தொடா்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.




