புதுச்சேரியில் சாலையோரம் நிறுத்திய 9 வாகனங்கள் பறிமுதல்
புதுச்சேரி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை திங்கள்கிழமை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
சாலையோரத்திலும், நடைபாதைகளிலும் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்கள், ஆம்புலன்ஸ்கள், ஆட்டோ, டிராக்டா் என 9 வாகனங்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பல பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகளில் கனரக, இலகு ரக, இரு சக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள், ஜெனரேட்டா்கள் மற்றும் கலவை இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


