வரதட்சணை கொடுமை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை
புதுக்கடை அருகே உள்ள திட்டுவிளை பகுதியில் வரதட்சணை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கடை , திட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரதிகலா(30). இவருக்கும் அம்சி, அரசகுளம் பகுதியைச் சோ்ந்த கொத சந்திரன் (40) என்பவருக்கும் கடந்த 2001இல் திருமணம் நடைபெற்றது.
அப்போது ரதிகலாவின் பெற்றோா் 28 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வரதட்சணையாக வழங்கி உள்ளனா். இத்தம்பதிக்கு மகள் உள்ளாா். சந்திரன் கூடுதலாக வரதட்சணை கேட்டு ரதிகலாவை கொடுமைப்படுத்தினாராம்.