திருச்சி மாநகராட்சி ஆணையராக நே. பொன்மணி பொறுப்பேற்பு
திருச்சி மாநகராட்சி ஆணையராக நே. பொன்மணி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
மதுரையில் 1996 ஆம் ஆண்டு பிறந்த இவா் திருச்சி என்ஐடியில் பி.டெக். கட்டடப் பொறியியல் படிப்பை முடித்துள்ளாா். யுபிஎஸ்சி தோ்வெழுதி 2021 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவா் சேலம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகவும், கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றினாா்.
தொடா்ந்து வணிக வரித் துறை இணை ஆணையராகப் பணியாற்றிய இவா், கடைசியாக இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டலக் கூடுதல் ஆணையராகப் பணியாற்றினாா்.



