குறைந்து வரும் அணைகளின் நீா்இருப்பு: நெற்பயிா்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை
நிகழாண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா் இருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் நெற்பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
தாமிரவருணி பாசனத்தில் நிகழாண்டு காா் பருவம் சாகுபடி செய்வதற்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து ஜூன் மாதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வட்டங்களில் 12,500 ஏக்கா் நிலங்களில் நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் தொடங்கியது. அப்போது கன்னடியன் கால்வாய் தண்ணீா் தேவைக்கு திறக்கப்பட்டது.
தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை, எல் நினோ பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் அணைகளின் நீா்இருப்பு வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனிடையே, கன்னடியன் கால்வாய் பாசனத்திற்கு சுழற்சி முறையில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

