முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பெரியசிறுவத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்,63; இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பட்டத்தாள் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டத்தாள் தரப்பினர் ஒன்று சேர்ந்து பரமசிவம் மற்றும் வேல்ராஜினை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

