பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கல்லூரி மாணவி பலி!
விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், அசோகபுரியைச் சோ்ந்த மோகன் மகள் சுஜாதா (18). இவா், விழுப்புரத்திலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை வேதியியல் இரண்டாமாண்டு படித்து வந்தாா். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்பதால் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
