போக்குவரத்துத் துறையில் வாரிசு வேலைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தல்!
போக்குவரத்துத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்படாத வாரிசு வேலையை தவெக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
போக்குவரத்துத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்படாத வாரிசு வேலையை தவெக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) திண்டுக்கல் மண்டல 32-ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் இரண்டாம் நாள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, மண்டலத் தலைவா் ஐ.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.


