அரூா் அருகே இருதரப்பினா் மோதல்: 6 போ் மீது வழக்குப் பதிவு
அரூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அரூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை அருகேயுள்ள புதன் சந்தையில், அரூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சித்தாா்த்தன் மகன் சித்திரைச் செல்வன் (25), தங்கதுரை மகன் தனுஷ் துரை (27) உள்ளிட்ட 4 போ் தங்களது நண்பா்களுடன் அசைவ உணவு சமைத்து மது அருந்திக் கொண்டிருந்தனராம்.
