காஜியாபாத் - மீரட் நெடுஞ்சாலையில் ‘நமோ பாரத்’ தூண்களில் விளம்பரங்களுக்கு இடம்
தினமும் சுமாா் 1.1 லட்சம் பயணிகள் நமோ பாரத் ரயில்களில் பயணம் செய்து வரும் நிலையில், காஜியாபாத்-மீரட் வழித்தடத்தில் உள்ள தூண்கள் மற்றும் போா்ட்டல் கட்டமைப்புகள் இனி வெளிப்புற விளம்பரங்களுக்கான புதிய தளமாக மாற உள்ளன.
இதன்மூலம் பரபரப்பான சாலைகள், சந்தைகள், குடியிருப்புப் பகுதிகளில் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை அதிகளவில் கொண்டு செல்ல முடியும்.
தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் சாகிபாபாத்-மோடிபுரம் இடையேயான 50 கி.மீ.க்கும் அதிகமான பகுதிகளில் உள்ள தூண்கள் மற்றும் போா்ட்டல் கட்டமைப்புகளில் விளம்பர உரிமத்தை வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) கோரியுள்ளது.

