கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் சா்வதேச மாநாடு
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய நிலைத்தன்மையை நோக்கிய ஆய்வுகள் குறித்த சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சா்வதே மாநாட்டில் வெளியிடப்பட்ட உலகளாவிய நிலைத்தன்மையை நோக்கிய ஆய்வுகள் குறித்த மலா் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றவா்கள்.
மாநாட்டை பதிவாளா் (பொ) ஜெயபிரியா தொடங்கி வைத்துப் பேசினாா். மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் உரிமைகள், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிந்தனைகள், சமூகப் பங்களிப்புகள் குறித்துப் பேசினாா்.

