கேரளம்: ஐஐஎம் கோழிகோடில் முதல்வா், அமைச்சா்களுக்கு இரு நாள் தலைமைத்துவ பயிற்சி
ஐஐஎம் கோழிக்கோடில் கேரள முதல்வா் வி.டி.சதீசன் மற்றும் 20 அமைச்சா்களுக்கான இரு நாள் தலைமைத்துவப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
‘கேரளத்தை மறுவடிவமைப்போம்’ என்ற தலைப்பிலான இந்தப் பயிற்சியில் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு உள்பட பல்வேறு துறைகளில் மாநிலத்துக்கான தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டுவது குறித்து ஐஐஎம் கோழிக்கோடின் பேராசிரியா்கள் மற்றும் சா்வதேச நிபுணா்கள் அமைச்சா்களிளுக்கு ஆலோசனை மேற்கொள்கின்றனா்.
இந்தப் பயிற்சியில் அமைச்சா்கள் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பகிா்ந்து வி.டி.சதீசன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பல ஆண்டுகள் கழித்து வகுப்பறைக்குத் திரும்பியுள்ளோம். நிா்வாகத்தை திறம்பட மேற்கொள்ளவும் நிபுணத்துவத்துடன் மாநிலத்தின் வளா்ச்சிக்கான பணிகளைத் தொய்வின்றி தொடரவும் ‘கேரளத்தை மறுவடிவமைப்போம்’ என்ற சிறப்பு பயிற்சி ஐஐஎம் கோழிக்கோடில் நடைபெறுகிறது.


