ஆஸ்திரேலிய மதபோதகா் கிரஹாம், மகன்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளி தாரா சிங் மனு நிராகரிப்பு
ஆஸ்திரேலிய மதபோதகா் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவரின் 2 மகன்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தன்னை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரிய குற்றவாளி தாரா சிங்கின் மனுவை ஒடிஸா அரசு நிராகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய மதபோதகா் கிரஹாம் மற்றும் அவரது குடும்பத்தினர் - ENS
ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் 1965-ஆம் ஆண்டு இந்தியா வந்தாா். ஒடிஸாவில் உள்ள மயூா்பஞ்ச் மாவட்ட கிறிஸ்தவ சங்கத்துடன் இணைந்து, அவரும் அவரின் மனைவி கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸும் பணியாற்றி வந்தனா்.
