ஆமதாபாத், சூரத் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இ மெயில் குறித்து போலீசார் விசாரணை
ஆமதாபாத்: ஆமதாபாத், சூரத் நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற வளாகங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆமதாபாதில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் வெடி வைத்து தகர்க்க போவதாக இ மெயில் வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டலில் கீகாந்தாவில் உள்ள பெருநகர நீதிமன்றம், லால்தர்வாஜா அமர்வு நீதிமன்றம் உள்பட ஆமதாபாதில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மிரட்டல் இ மெயில் பற்றிய விவரம் அறிந்த போலீசார், உடனடியாக பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணையை தொடங்கினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
