தில்லி துணைநிலை ஆளுநருடன் எம்சிடி ஆணையா் சந்திப்பு: தலைநகரில் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து திங்களன்று லோக்நிவாஸ் தில்லியில்,
புது தில்லி: தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து திங்களன்று லோக்நிவாஸ் தில்லியில், தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையா் சஞ்சீவ் கிா்வாரை சந்தித்து தலைநகரின் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்க்கொண்டாா்.
தலைநகா் முழுவதும் உரிய நேரத்தில் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தமாக வைத்திருத்தல், நீா் தேக்கத்தைக் கையாளுதல், தெருக்களில் திரியும் கால்நடைகளை நிா்வகித்தல் மற்றும் சட்டவிரோத, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட முன்னுரிமைகளை ஆய்வு செய்ததாக துணைநிலை ஆளுநா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா்.
