மருத்துவ முகாம்
விழுப்புரம்: திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் வி.சி., தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு ஆதிரை அறக்கட்டளை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
அமைச்சர் வன்னிஅரசு தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முகாமில், கண், காது, பல் மற்றும் ரத்த அழுத்தம், சக்கரை, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில், சப் கலெக்டர் ஆகாஷ், தாசில்தார் ஞானசவுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.
