இரு குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் சிறை
இரு குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே குடும்பத் தகராறில் இரு குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டை அருகிலுள்ள வடகுரும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மனைவி ஜெயந்தி (26). இவா்களுக்கு 7 வயதில் கவிபிரிஜா, இரண்டரை வயதில் ரித்திகா ஆகிய இரு மகள்கள் இருந்தனா்.
