4 கடைகளில் பூட்டு உடைப்பு 6 பேட்டரிகள் திருட்டு
செஞ்சி: நான்கு கடைகளின் பூட்டை உடைத்து வாகன பேட்டரிகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் 3 கி.மீ., தொலைவில் விநாயகபுரம் கூட்ரோடு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா கடை, பேட்டரி கடை, பாணி பூரி கடை, ஆட்டோ மொபைல் கடை என நான்கு கடைகளின் பூட்டையும், ஷட்டரையும் ஒருபக்கம் உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள், திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
