ஹெச்பிஎஃப் ஆலையில் வெள்ளி மண் திருட்டு: 5 போ் கைது
உதகையில் உள்ள மூடப்பட்டுள்ள ஹெச்பிஎஃப் தொழிற்சாலைக்குள் புகுந்து வெள்ளி மண் திருடி வனப் பகுதியில் பதுக்கி வைத்து விற்க முயன்ற 5 பேரை புதுமந்து காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஹெச்பிஎஃப் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் தொழிற்சாலை, நிதி நெருக்கடி, பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இதையடுத்து, தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மண்ணில் தங்கம், சில்வா் நைட்ரேட் கலந்த வெள்ளித் துகள்கள் கலந்திருப்பதாக நம்பப்பட்டதால், சிலா் அந்த மண்ணை சட்டவிரோதமாக அள்ளிச் சென்று விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

