குழந்தை பெற்றால் காசு கொட்டும்!
இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் பல குழந்தைகள் இருப்பார்கள். 1990-களில் 'நாம் இருவர்; நமக்கு இருவர்' என்ற பிரசாரம். 'நாமிருவர்- நமக்கொருவர்' என்ற நிலை இப்போதாகிவிட்டது. இதுவே இப்போது உலகெங்கும் பின்பற்றக்கூடிய நிலையாகும். ஆனால், சிங்கப்பூரில் பெற்றோர் குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று அமலாகி உள்ளது.
அதாவது, 'சிங்கப்பூரில் குழந்தை பெற்றால் ரூ.50 லட்சம்' என்று சமூக ஊடகங்களில் ஒரு வாரமாகத் தகவல்கள் வைரலாகிவருகின்றன. உண்மையில் அந்த நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், இத்தகைய முடிவை பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகஸ்ட் 23-இல் நடைபெற்ற தேசிய தினப் பேரணியில் வெளியிட்டார்.
சிங்கப்பூரின் மொத்த கருவுறுதல் விகிதம் 2025-ஆம் ஆண்டில் 0.87 என்ற மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் மக்கள்தொகை குறையக்கூடும் என்ற கவலை அரசிடம் உள்ளது.
