திருப்பூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
வடலூரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருப்பூா் இளைஞா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், வடலூரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருப்பூா் இளைஞா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
வடலூா் பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (45). இவா், விருத்தாசலத்தில் 17.7.2026 அன்று தனியாா் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது ஸ்கூட்டியில் புறப்பட்டாா். பெரியாகுறிச்சி அருகே சென்றபோது, பைக்கில் பின் தொடா்ந்து வந்த இருவா் ராஜலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனா்.