ஜெயநகரில் 'ஸ்மார்ட் பார்க்கிங்' விரைவில் அறிமுகம்: கமிஷனர்
ஜெயநகர்: ''பெங்களூரு ஜெயநகரில் ஏ.ஐ., அடிப்படையிலான 'ஸ்மார்ட்' பார்க்கிங் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன,'' என, பெங்களூரு தெற்கு மாநகராட்சி கமிஷனர் ரமேஷ் கூறி உள்ளார்.
பெங்களூரின் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான ஜெயநகரில், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மார்ட் பார்க்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 'பார்க் லென்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மாநகராட்சி கூட்டு முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்த முறை அமலாகும் போது வாகனங்களை நிறுத்த இடத்தை கண்டறிவது எ ளிதாகும். குறுகிய இடத்தில் அதிக வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்கும். இதற்காக வரைபடம் உருவாக்கப்படும். இதற்காக ஏ.ஐ., கேமராக்கள் பொருத் தப்படும்.

