கோவில்பட்டியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை
கோவில்பட்டியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்.
கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் வெள்ளிக்கிழமை ( செப். 18) நடைபெற உள்ளது. அவற்றை சிறப்பாக நடத்த கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.


