20 ஆண்டுகளாக ஒரே எண்... லாட்டரி குலுக்கலில் 3 பம்பர் பரிசு வென்ற பெண்
வாஷிங்டன்,அதிர்ஷ்டம் எப்போது, எப்படி கதவைத் தட்டும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விடாமுயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் ஒருநாள் அதிர்ஷ்டம் தேடி வ
அதிர்ஷ்டம் எப்போது, எப்படி கதவைத் தட்டும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விடாமுயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் ஒருநாள் அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நிரூபித்துக் காட்டியுள்ளார். கடந்த 20 வருடங்களாக ஒரே எண்களைப் பயன்படுத்தி லாட்டரி சீட்டு வாங்கி வந்த பெண் ஒருவருக்கு, ஒரே குலுக்கலில் 3 பம்பர் பரிசு கிடைத்துள்ளது உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தைச் சேர்ந்த 66 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்டரி விளையாடி வருகிறார். இவர் எப்போதும் தனது குடும்பத்தினரின் பிறந்த எண்கள் மற்றும் ராசி எண்களை மட்டுமே (5, 6, 8, 12, 30) தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை), மேரிலாந்து லாட்டரியின் 'போனஸ் மேட்ச் 5' என்ற விளையாட்டிற்காக அவர் லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். வழக்கமாக ஒரு சீட்டு மட்டுமே வாங்கும் அவர், அன்று ஏனோ தெரியவில்லை, அதே எண்களைக் கொண்டு மொத்தம் 3 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.

