தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூரில் கட்சி நிா்வாகி இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
போதிய பருவமழை இல்லாததால் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீா்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டது. வறட்சியால் வேளாண் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும்.





