புகழ்பெற்ற லடாக் மாரத்தான்: உலகம் முழுவதுமிருந்து 8,000 வீரர்கள் பங்கேற்பு!
இந்தியாவின் புகழ்பெற்ற லடாக் மாரத்தானில் உலகம் முழுவதுமிருந்து 8,000 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் புகழ்பெற்ற லடாக் மாரத்தானின் 13-வது ஆண்டு தொடர் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 8,000-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
13-வது லடாக் மாரத்தான் செப்டம்பர் 10 முதல் 13 வரை 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் கடைசி நாளான இன்று முழு மாரத்தான் (42.195 கிமீ), அரை மாரத்தான் (21.1 கிமீ), 11.2 கிமீ ஓட்டம் போன்றவை நடைபெறுகின்றது.



