தமிழில் கும்பாபிஷேகம் நடத்த தாக்கலான வழக்கு தள்ளுபடி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களின் கும்பாபிஷேக விழாவில், சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் இடம் பெற தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் ஆகம கோவில்களை கண்டறிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.


