அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 97 சதவீதம் மாணவா் சோ்க்கை: கடந்தாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகரிப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ஐடிஐ) 97 சதவீதம் மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகம்.
கோப்புப்படம்.
திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூா், மணிகண்டம், மணப்பாறை, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா் மற்றும் திருச்சி மத்திய சிறை ஆகிய 6 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருச்சி மத்திய சிறை தொழிற்பயிற்சி நிலையத்தில் கைதிகளுக்கு மட்டுமே சோ்க்கை வழங்கப்படுகிறது. புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மகளிருக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது.

