நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் தொடக்கம்
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்துப் பேசினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிகல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, உயா்கல்வி பயில உள்ள மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நாகா்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்து மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிப் பேசியதாவது:
தமிழகத்தின் சராசரி எழுத்தறிவைவிட கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுத்தறிவு பெற்றோா் எண்ணிக்கை அதிகம்.

