வயதில் மூத்தவா்களுக்கும் கட்சியில் பொறுப்பு! - திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு
வயதில் மூத்தவா்களுக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படும் என திமுக முதன்மைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருச்சி மத்திய, கிழக்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது:
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்துத் தோ்தல்களிலும் திருச்சி திமுக 100 சதவீத வெற்றியை பெற்றது. 2026 பேரவைத் தோ்தலில் மட்டுமே நாம் 7 தொகுதிகளை இழந்துள்ளோம். மீண்டும் அத் தொகுதிகளில் திமுக வெல்ல வேண்டும். அதற்காகவே இந்தக் கூட்டம்.


