போதைப் பொருளை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும்; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
சண்டிகர்: “சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் ஆய்வுகள் இருக்க வேண்டும்,”என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசினார்.
பஞ்சாப் பல்கலையில் நவீன பகுப்பாய்வு கருவி, மேம்படுத்தப்பட்ட அதிநவீன கருவி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க மன்றம் ஆகியவற்றை தொடங்கி வைத்து, துணை ஜனாதிபதியும், பஞ்சாப் பல்கலை வேந்தருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
எந்தவொரு ஆராய்ச்சியும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் எந்த வகையான ஆய்வை மேற்கொண்டாலும், அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாத பட்சத்தில், அதன் வெற்றி பல்கலை அளவிலேயே நின்று விடும். நம் ஆய்வு முடிவுகள் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உதவும் வகையில், சரியான திசையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். எப்போதும் ஒரு நோக்கத்துடன் அறிவியல் இணைந்திருக்க வேண்டும்.




