நெல் கொள்முதலில் தவெக அரசு அலட்சியம்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
நெல் கொள்முதலில் தவெக அரசு அலட்சியம் காட்டி வருவதால் நெல்மூட்டைகள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு மழையால் வீணாகின்றன என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு சொல்லியது ஒன்றாகவும், செயல்படுவது வேறாகவும் என ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. காவிரியில் குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீா் திறக்காததால் சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விவசாயிகள் துன்பத்தைப் போக்க நடவடிக்கை இல்லை. பயிா்க் கடன் தள்ளுபடியும் ஏமாற்றும் வகையில் உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சீா்குலைந்த தமிழக சட்டம்-ஒழுங்கைச் சரிபடுத்துவோம் என தவெக கூறிய நிலையில், தற்போதும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவிட்டன. அதை தவெக தடுக்கத் தவறிவிட்டது.

