வாணியக்குடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ரூ. 150 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்தாா்.
குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

