விட்டல்ராவ் எனும் கலைச்சுரங்கம்
தமிழர் பண்பாடு, கலாசாரம், கலை, இலக்கியம், தொல்லியல் போன்ற பல்வேறு பிரிவுகளில் தமிழில் முத்திரைப் பதித்த விட்டல்ராவ் நிஜத்தில் கலைச்சுரங்கம்தான் என்பதைப் படித்து முடித்தவுடன் எண்ணத் தோன்றுகிறது.
விட்டல்ராவ் எனும் கலைச்சுரங்கம்-எஸ்ஸார்சி; பக். 138; ரூ. 120; குவிகம் பதிப்பகம், சென்னை-600 078; ✆ 97910 69435.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் முத்திரையைப் பதித்த நாடறிந்த எழுத்தாளரான விட்டல்ராவ் சென்னை தொலைபேசித் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி, தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். அவர் தனது பணிக்காலத்தில் எழுத்துத் துறையில் முத்திரையைப் பதித்ததையும், அவருக்கும் எழுத்தாளர் பாவண்ணன், தனக்கும் உள்ள நட்பின்பால் விட்டல்ராவின் எழுத்துகள் தொடர்பான ஆராய்ச்சியாகவே இந்த நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார்.


