18 ஆண்டுகள்... 40 ஆயிரம் பாம்புகள்!
'பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், சரியான புரிதல் இல்லாததால் பாம்புகள் குறித்த பயம் அதிகமாகிவிட்டது.
'பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், சரியான புரிதல் இல்லாததால் பாம்புகள் குறித்த பயம் அதிகமாகிவிட்டது' என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளரும், அருங்கானுயிர் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) நிறுவனருமான முனைவர் ஆர்.சதீஷ்குமார்.
இவர் தனது குழுவினருடன் இணைந்து தஞ்சாவூர், அதன் சுற்றுப்பகுதிகளில் 18 ஆண்டுகளில் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார்.

