முக்கியத்துவம் கொடுங்க!
தென்னை நார் தொழில் மேம்பாட்டுக்கு... ஏற்றுமதி அதிகரிக்க குழு அமைக்கணும்
பொள்ளாச்சி: தென்னை நார் தொழில் மேம்படுத்துவதற்கான திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும், ஏற்றுமதி அதிகரிக்க குழு அமைக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தென்னை நார் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர்.
இந்தியாவில் இருந்து, ஆண்டுதோறும், 9.81 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், தமிழகத்தில் இருந்து மட்டும், ஆறு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
